ADDED : டிச 14, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
வெள்ளி உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் வளாகத்தை சுற்றி வலம் வந்தனர்.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ விழாவில் சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை, பூஜைகள் நடந்தது.