sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

↓காரைக்குடி பகுதி பேரூராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல்.... l ↓செயல் அலுவலர்கள் காலிபணியிடங்களால் அவதி

/

↓காரைக்குடி பகுதி பேரூராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல்.... l ↓செயல் அலுவலர்கள் காலிபணியிடங்களால் அவதி

↓காரைக்குடி பகுதி பேரூராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல்.... l ↓செயல் அலுவலர்கள் காலிபணியிடங்களால் அவதி

↓காரைக்குடி பகுதி பேரூராட்சி நிர்வாகங்களுக்கு சிக்கல்.... l ↓செயல் அலுவலர்கள் காலிபணியிடங்களால் அவதி


ADDED : டிச 26, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிர்வாக

பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 11 பேரூராட்சிகளில் 6 இடங்களில் செயல் அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவே உள்ளன. இதனால் கூடுதல் பணியிடங்களை 5 செயல் அலுவலர்களே சேர்த்து கவனிக்கும் அளவிற்கு நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பேரூராட்சி பகுதியில் வீடு, குடிநீர், சொத்து வரி வசூல், சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு, கவுன்சில் கூட்டங்களை நடத்தி தீர்வு காணுதல் போன்று அனைத்து பணிகளையும் செயல் அலுவலர் தலைமையில் தான் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், மாவட்ட அளவில் 6 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களே இல்லாததால், வரி வசூல், குடிநீர் வினியோகம், சுகாதாரம் கடைபிடித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட அளவில் உள்ள 11 பேரூராட்சிகளில் தற்போது 5 பேரூராட்சிகளில் மட்டுமே செயல் அலுவலர்கள் உள்ளனர். இவர்களும் 2 முதல் 3 பேரூராட்சிகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் நிர்வாக பணிகள், வரிவசூல், சுகாதார பணிகள் அனைத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு செயல் அலுவலரிடம் தான் முறையிட முடியும். அவரது பணியிடமே காலியாக இருப்பதால் யாரிடம் குறைகளை கூறி, நிவர்த்தி பெற்று செல்வது என தெரியாமல் கவுன்சிலர்கள் தவிக்கின்றனர்.

எனவே பேரூராட்சிகளில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகங்கள் துறை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us