/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 'காப்பு'
/
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : டிச 29, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டதைச் சேர்ந்தவர் கார்த்திக், 36, கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், 11 வயது சிறுமியின் தாயும், தந்தையும், வயல் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி, வீட்டில் தனியாக இருந்தவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .
இதில், வீட்டிற்குள் அச்சிறுமி மயங்கி கிடந்தார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது, கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, புகாரின் படி, கார்த்திக்கை மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

