ADDED : ஜன 28, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகரத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை ஏற்றார்.
மாநகரச் செயலாளர் வெங்கிட்டு முன்னிலை வகித்தார், ஆட்டோ சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன் பேசினர். காரைக்குடியில் அனுமதி இல்லாமல் விதியை மீறி இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், ஆட்டோவிற்கான செயலியை அரசே உருவாக்கி மீட்டர் கட்டணத்தை மாற்றி அறிவிப்பு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

