/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
/
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2025 02:06 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜன.25ல்மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் 3 படகையும், அதில் இருந்த 34 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இவர்களையும் ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தீர்வு காண மாற்று தொழிலுக்கு செல்ல விரும்புவோருக்கு படகுகளை அரசு பெற்று கொண்டு தலா ஒரு படகிற்கு ரூ. 40 லட்சம்நிவாரணம் வழங்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள்ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.