ADDED : டிச 07, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில் சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாழைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காளைலிங்கம் முன்னிலை வகித்தார்.
விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய கம்யூ., மாவட்ட உதவி செயலாளர் மருது, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணை தலைவர் சகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.