sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்

/

பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்

பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்

பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்


ADDED : அக் 19, 2024 05:15 AM

Google News

ADDED : அக் 19, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: புதுவயல் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பின்றி கிடப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். புதுவயலில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு 2001ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தொடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 2003 ஆம் ஆண்டு திறப்பு விழா நடந்தது. புதுவயல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, காரைக்குடி மதுரை அறந்தாங்கி பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.

தவிர சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மித்ராவயல், தச்சகுடி, பெரிய கோட்டை, சாக்கவயல், ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் 5 க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.

பஸ் ஸ்டாண்டில் நுழைவு வாயில் முற்றிலும் சேதமடைந்து கிடப்பதோடு மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாக்கடை தேங்கி நிற்கிறது.

பஸ் ஸ்டாண்ட் முழுவதும் பைக் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பயன்பாடு இன்றி முடிக்கிடக்கிறது. பயணிகள் அமரும் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது.

புதுவயல் பஸ் ஸ்டாண்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us