/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக மாறுமா சிவகங்கை மனது வைக்க வேண்டும் ரயில்வே நிர்வாகம்
/
சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக மாறுமா சிவகங்கை மனது வைக்க வேண்டும் ரயில்வே நிர்வாகம்
சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக மாறுமா சிவகங்கை மனது வைக்க வேண்டும் ரயில்வே நிர்வாகம்
சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக மாறுமா சிவகங்கை மனது வைக்க வேண்டும் ரயில்வே நிர்வாகம்
ADDED : பிப் 05, 2025 05:16 AM
சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனை சீர்மிகு ஸ்டேஷனாக தரம் உயர்த்த, தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியே ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, எர்ணாகுளம் போன்ற நகரங்களில் இருந்து சென்னை, வேளாங்கண்ணி, வாரணாசி, பெங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பிற நகரங்களுக்கு ரயில் மூலம் 7 லட்சம் பயணிகள் செல்கின்றனர். இவர்கள் மூலம் ரூ.5 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. தினமும் 2 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதன் மூலம் ரூ.1.20 லட்சம் வரை வருவாய் தரும் முக்கிய ஸ்டேஷனாக உள்ளது.
சீர்மிகு ஸ்டேஷனாக மாற்றவும்
இந்த ரயில்வே ஸ்டேஷனில் பழைய ரிசர்வேஷன் கவுண்டர், பயணிகள் தங்கும் அறை, தேசிய வங்கி ஏ.டி.எம்., மைய கட்டடங்கள் பாழடைந்து கிடக்கிறது. பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை அகற்றி, ரயில்வே ஸ்டேஷனை சுற்றி காம்பவுண்ட் அமைத்து பாதுகாக்குமாறு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங்., ஆய்வின் போது தெரிவித்து சென்றார். ஆனால், தற்போது வரை இப்பழைய கட்டடங்களை அகற்ற ரயில்வே அதிகாரிகள் முன்வரவில்லை.
பொது மேலாளர் வருகைக்கு பின், ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மை அகற்றி, சென்னை, மதுரையில் உள்ளது போன்று பிளாட்பாரம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது பயணிகள் இரண்டாவது,மூன்றாவது பிளாட்பாரத்திற்கு செல்ல ஒரு லிப்ட்' வசதி மட்டுமே செய்துள்ளனர். 2 வது பிளாட்பாரத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்திற்கு வர லிப்ட் வசதி கிடையாது. ஆதலால் கூடுதலாக லிப்ட்' வசதி செய்வதற்கான பணிகளை விரைந்து துவக்க வேண்டும்.
பாம்பன் பாலத்தால் விடிவு
விரைவில் ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் திறந்த பின் ராமேஸ்வரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் சிவகங்கை வழியே ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் அதிக ரயில் போக்குவரத்துள்ள பகுதியாக வளர்ச்சி பெறும். அதற்கு முன் சிவகங்கையை சீர்மிகு ரயில்வே ஸ்டேஷனாக' தரம் உயர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.