ADDED : ஜூலை 09, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூலை 12 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில், கார்டுதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம், ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம், என்றார்.