sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு

/

நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு

நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு

நகராட்சியில் பயன்படாத வாகனம்ரூ.8 லட்சத்தில் மறு சீரமைப்பு


ADDED : அக் 01, 2024 04:55 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் 10 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்த கனரக வாகனத்தை குடிநீர் விநியோக வாகனமாக சீரமைத்து நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

சிவகங்கை நகராட்சியில் 10 ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த குப்பை அள்ளும் லாரி, மினி சரக்கு வாகனம், குப்பை தொட்டி ஏற்றிச்செல்லும் வாகனத்தை ரூ.8 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதில் குப்பை அள்ளும் லாரி குடி நீர் வாகனமாகவும், குப்பை தொட்டி ஏற்றிச்செல்லும் வாகனம் மொபைல் டாய்லட் ஆகவும், மினி சரக்கு வாகனத்தை சிறியரக கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனமாக மறு சீரமைப்பு செய்துள்ளனர். மறு சீரமைக்கப்பட்ட குடிநீர் வாகனத்தை நேற்று நகராட்சி தலைவர் துரைஆனந்த் 26 வார்டில் துவக்கி வைத்தார். கமிஷனர் கிருஷ்ணாராம், மேலாளர் கென்னடி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மற்ற இரண்டு வாகனமும் மறு சீரமைப்பு பணி நடப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மேலாளர் கென்னடி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us