sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சீரமைப்பு பிரமனுார் கால்வாயில் சேதமடைந்த சுவர ஒரு சில மாதங்களில் பணி முடிக்க திட்டம்

/

சீரமைப்பு பிரமனுார் கால்வாயில் சேதமடைந்த சுவர ஒரு சில மாதங்களில் பணி முடிக்க திட்டம்

சீரமைப்பு பிரமனுார் கால்வாயில் சேதமடைந்த சுவர ஒரு சில மாதங்களில் பணி முடிக்க திட்டம்

சீரமைப்பு பிரமனுார் கால்வாயில் சேதமடைந்த சுவர ஒரு சில மாதங்களில் பணி முடிக்க திட்டம்


ADDED : மார் 06, 2024 06:00 AM

Google News

ADDED : மார் 06, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம், : திருப்புவனம் அருகே பிரமனுார் கால்வாயில் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் தற்போது புதிதாக சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்தும், மழைத்தண்ணீரும் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனுார் கண்மாய் வரையிலான ஏழு கி.மீ., துாரமுள்ள கால்வாயில் வைகை ஆற்றினுள் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் திருப்புவனம் எஸ்.எம்.எஸ்., நகர் அருகே 100 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் சேதமடைந்ததால் தற்காலிகமாக மணல் கொண்டு அடைக்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தடுப்புச்சுவரை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறையினர் புதிய சுவர் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் :

வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் 28 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் 48 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அதில் பிரமனுார் கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணியையும் இணைத்துள்ளோம், நான்கரை மீட்டர் உயரமும், 100 மீட்டர் துாரத்திற்கும் புதிய சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது. திட்ட மதிப்பீடு ஒரு கோடி ருபாய் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் கால்வாயில் தண்ணீர் திறப்பு இருக்காது என்பதால் பணிகளை தொடங்கியுள்ளோம், ஒருசில மாதங்களில் பணிகளை நிறைவடைந்து செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் பயன்பாட்டிற்கு வரும், என்றனர்.






      Dinamalar
      Follow us