sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 திருப்புத்துார் ரேஷன் கடையிலிருந்த அரிசி, சர்க்கரை மூடைகள் மாயம்; அமைச்சர் தொகுதியிலேயே கடத்தலா என விசாரணை

/

 திருப்புத்துார் ரேஷன் கடையிலிருந்த அரிசி, சர்க்கரை மூடைகள் மாயம்; அமைச்சர் தொகுதியிலேயே கடத்தலா என விசாரணை

 திருப்புத்துார் ரேஷன் கடையிலிருந்த அரிசி, சர்க்கரை மூடைகள் மாயம்; அமைச்சர் தொகுதியிலேயே கடத்தலா என விசாரணை

 திருப்புத்துார் ரேஷன் கடையிலிருந்த அரிசி, சர்க்கரை மூடைகள் மாயம்; அமைச்சர் தொகுதியிலேயே கடத்தலா என விசாரணை

1


ADDED : டிச 26, 2025 02:18 AM

Google News

ADDED : டிச 26, 2025 02:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில், புதுக்கோட்டை ரோட்டில் உள்ள பாம்கோ எண் 3 என்ற ரேஷன் கடையில், கூட்டுறவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கடையின் விற்பனையாளராக பாலசுப்பிரமணியன் பணிபுரிகிறார்.

அதிகாரிகள் ஆய்வின்போது, ரேஷன் கடையின் இருப்பு புத்தகத்தில் உள்ள விபரங்களின்படி சரக்கு இருப்பு இல்லை. மேலும், 50 கிலோ எடையில், 190 மூட்டை அரிசி, 11 மூட்டை சர்க்கரை, 11 பெட்டி பாமாயில், 7 மூட்டை கோதுமை மாயமாகியிருந்தது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியிலேயே ரேஷன் கடையில் இருந்து அரிசி, சர்க்கரை, பாமாயில் கடத்தல் நடந்துள்ளதா என, கூட்டுறவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக இயக்குநர் பாலு கூறுகையில், “அந்த கடை விற்பனையாளர், இருப்பு விபரத்தை நோட்டில் எழுதுவதை மறந்து விட்டதாக தெரிவிக்கிறார். விசாரணை குழு அறிக்கையின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us