sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மானாமதுரையில் மோதிரம் வழிப்பறி: டூவீலரில் வந்தவரிடம் கைவரிசை

/

 மானாமதுரையில் மோதிரம் வழிப்பறி: டூவீலரில் வந்தவரிடம் கைவரிசை

 மானாமதுரையில் மோதிரம் வழிப்பறி: டூவீலரில் வந்தவரிடம் கைவரிசை

 மானாமதுரையில் மோதிரம் வழிப்பறி: டூவீலரில் வந்தவரிடம் கைவரிசை


ADDED : டிச 01, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் டூவீலரில் வந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் அலைபேசியை பறித்து, கூகுள் பே ரகசிய எண்ணை கேட்டு 4 பேர் தாக்கியதில், காயமுற்ற தயாபுரம் கருணாகரன் 22, காயத்துடன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மானாமதுரை தயாபுரத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் கருணாகரன் 22. இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே உள்ள வைகை ஆற்று மேம்பாலம் அருகே டூவீலரில் சென்றுள்ளார்.

எதிரே ஒரு டூவீலரில் வந்த 4 பேர், கருணாகரன் வந்த டூவீலரை தள்ளிவிட்டதில், பள்ளத்தில் விழுந்தார். அப்போது 4 பேர்களும் அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரம், அலைபேசியை பறிமுதல் செய்ததோடு, அவரது கூகுள் பே வங்கி ரகசிய எண்ணையும் கேட்டுவிட்டு தப்பினர்.

சிப்காட் போலீசார் கருணாகரனை மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us