/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
/
கோயில்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
ADDED : நவ 26, 2024 05:20 AM

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும், நந்தி பெருமானுக்கும் 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னர் கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றன. நிகழ்ச்சியில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில் அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றன.
விழாவில் இளையான்குடி பரமக்குடி சாலைக்கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.