ADDED : நவ 26, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக், நர்சரி பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜ்குமார் நடுவராக இருந்து மாணவர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
கண்காட்சியில் தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, நிர்வாகிசாலமன், முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தாளாளர் கிறிஸ்டிராஜ் செய்துஇருந்தார்.

