ADDED : ஜன 02, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் பரஸ்பர நிதி முதலீடு மூலம் செல்வம் உருவாக்கல் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் முதல்வர் ஜபருல்லாகான் தலைமையில் நடந்தது. துறை தலைவர் நைனா முகமது வரவேற்றார்.
கோவை பாரதியார் பல்கலை., வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் ஜெகதீஸ்வரன் சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர்கள் நாசர்,நசீர் கான் நன்றி கூறினார்.