sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறப்பு இழுபறி

/

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறப்பு இழுபறி

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறப்பு இழுபறி

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் திறப்பு இழுபறி


ADDED : மே 08, 2025 03:19 AM

Google News

ADDED : மே 08, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட தினசரி சந்தை கட்டடம், பஸ் ஸ்டாண்டில் உள்ள 18 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்டுவதற்காக கட்டுமான பணி நடந்தது. வாகனங்கள் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை பிப்.6,18, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு கடைக்கு வைப்புத்தொகையாக ரூ. ஒரு லட்சம் செலுத்த வேண்டுமென முதல் 2 ஏலத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல் 2 ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.

வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமாக குறைத்து ஏலம் அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 5ல் நடந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் மூன்று முறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் 3.49 கோடியில் கடைகள் கட்டியும் வியாபாரிகள் ஏலம் எடுக்க வராததால் நகராட்சிக்கு தற்போது இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள 18 கடைகளுக்கும் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் ப புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டி முடிக்கப்பட்ட தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் கடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us