sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மண்டல அறிவியல் மாநாட்டில்  சிவகங்கை மாணவர்கள் பங்கேற்பு

/

 மண்டல அறிவியல் மாநாட்டில்  சிவகங்கை மாணவர்கள் பங்கேற்பு

 மண்டல அறிவியல் மாநாட்டில்  சிவகங்கை மாணவர்கள் பங்கேற்பு

 மண்டல அறிவியல் மாநாட்டில்  சிவகங்கை மாணவர்கள் பங்கேற்பு


ADDED : டிச 06, 2025 10:00 AM

Google News

ADDED : டிச 06, 2025 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: துாத்துக்குடியில் நடந்த மண்டல அறிவியல் மாநாட்டில் சிவகங்கை மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.

அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது. இங்கு மாணவர்கள் சமர்பித்த ஆய்வு கட்டுரைகளில் இருந்து சிறந்த 10 கட்டுரைகளை தேர்வு செய்தனர். இந்த கட்டுரைகளை துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த மண்டல மாநாட்டில் மாணவர்கள் சமர்பித்தனர். இளநிலை தமிழ், ஆங்கிலம், முதுநிலை தமிழ், ஆங்கிலம் என நான்கு பிரிவுகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தனர்.

மண்டல மாநாட்டில் 40 ஆய்வு கட்டுரைகள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வானது. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க மேலையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீதர், வீர கணபதி இளநிலை தமிழ் பிரிவு, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஜெயபாலன், பாண்டி, செல்வம் ஆகியோர் இளநிலை ஆங்கில பிரிவில் தேர்வாகினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் சேவற்கொடியோன், ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, மாவட்ட பொருளாளர் பிரபு ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us