sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேருக்கு 'கம்பி'

/

தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேருக்கு 'கம்பி'

தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேருக்கு 'கம்பி'

தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேருக்கு 'கம்பி'


ADDED : செப் 08, 2025 03:27 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே, 'மைக் செட்' தொழிலாளியை கொலை செய்த சிறுவன் உட்பட, ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சங்கமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் புதுமனை புகுவிழாவிற்காக, 'மைக் செட ் ' போடும் பணியில் நேற்று முன்தினம் காளீஸ்வரன் ஈடுபட்டிருந்தார். பழிக்குப்பழியாக கொலை செய்யும் நோக்கத்தில், அங்கு மூன்று டூ - வீலர்களில் எட்டு பேர் வந்தனர்.

அவர்கள் தேடி வந்த நபர் அங்கு இல்லாததால், அவரது நண்பரான காளீஸ்வரனை வெட்டி கொன்றனர்.

இக்கொலையில் ஈடுபட்டதாக, மானாமதுரை, கீழப்பசலையைச் சேர்ந்த சுஜித், 21, நரேஷ், 19, முத்துராமலிங்கம், 23, நிதீஷ் கண்ணன், 19, கனீஷ்குமார், 21, மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

காளீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம், வேலை வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us