ADDED : நவ 04, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பட்டேலின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஒற்றுமை அணிவகுப்பு ஊர்வலம் காளையார்கோவிலில் நடந்தது. ஊர்வலத்தை புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார்.
தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், என்.சி.சி., படை யினர் பங்கேற்றனர்.

