/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ஆய்வு
/
சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ஆய்வு
சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ஆய்வு
சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ஆய்வு
ADDED : பிப் 08, 2025 04:57 AM
சிவகங்கை: சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து பல்கலை பதிவாளரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சிவகங்கையில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். சிவகங்கை எம்.பி., கார்த்தி, ஜன., 22 ல் சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இக்கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் ஸ்டாலின், இக்கோரிக்கை மனு மீதான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். சிவகங்கையில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து கால்நடை மருத்துவ பல்கலை நிர்வாகம் ஆய்வு நடத்த உள்ளனர். கால்நடை பராமரிப்பு துறை அரசு துணை செயலர் எஸ்.மீனலோச்சனி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ பல்கலை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.