ADDED : ஜூன் 19, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கு, குன்றக்குடி அடிகள்நுாற்றாண்டு விழாவை நடத்தி, அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், முன்னாள் செயலாளர்கள் முத்துப்பாண்டியன், ராமசந்திரன், மாலா பங்கேற்றனர். பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.