/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள் ஜன.4, 5ல் வழங்கப்படும்
/
தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள் ஜன.4, 5ல் வழங்கப்படும்
தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள் ஜன.4, 5ல் வழங்கப்படும்
தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள் ஜன.4, 5ல் வழங்கப்படும்
ADDED : ஜன 02, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்ட அளவில் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஜன.4 மற்றும் 5ம் தேதியன்று பொருட்கள் வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜன., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஜன., 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் கார்டுதாரர்களுக்கு, விற்பனையாளர்கள் அவரவர் வீட்டிற்கே சென்று வழங்க உள்ளனர் என்றார்.

