sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்நடை வளர்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 2 ஆயிரம் கோடி 'சும்மா கிடக்குது'

/

கால்நடை வளர்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 2 ஆயிரம் கோடி 'சும்மா கிடக்குது'

கால்நடை வளர்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 2 ஆயிரம் கோடி 'சும்மா கிடக்குது'

கால்நடை வளர்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 2 ஆயிரம் கோடி 'சும்மா கிடக்குது'


ADDED : நவ 20, 2024 02:44 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்,:கால்நடை வளர்ப்பிற்காக மத்திய அரசு வழங்கிய இரண்டாயிரம் கோடி ரூபாய் மானிய நிதி யாரும் ஆர்வம் காட்டாததால் வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு ஐம்பது சதவீத மானியத்தில் கால்நடை வளர்க்க தனி நபருக்கு 50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க இரு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கியது.

தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கால்நடை வளர்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி பெற்று சான்று பெற்றிருக்க வேண்டும். சொந்தமாக கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளை நிலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. மானியமாக மட்டும் தமிழகத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு வைகை பூர்வீக பாசன சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறியது: தமிழகத்தில் ஆடு, கோழி இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பற்றாக்குறை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்தும் இறைச்சி வரவழைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் குத்தகைக்கு வாங்கி பயிரிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதுதவிர அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்டவற்றில் வேலி அமைத்தும் ஆடு, கோழி வளர்த்து வருகின்றனர்.

எனவே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், ஏற்கனவே ஆடு, கோழி வளர்ப்பை பிரதானமாக மேற்கொண்டு வருபவர்களை கணக்கில் கொண்டு அரசு அவர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும், என்றார்.

மத்திய அரசின் தேசிய கால்நடை பணி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்புக்கு வழங்கப்படும் கடன் உதவி திடடம் வெற்றி பெற வேண்டுமானால் அதுகுறித்து கிராமப்புற மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us