ADDED : ஜன 06, 2025 12:10 AM
மானாமதுரை; பெருமாள் கோயில்களில் ஜன.,10 அன்று அதிகாலை 5:45 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறஉள்ளது.
* சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஜன., 10 அன்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கும். காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். ஹிந்து அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
* மானாமதுரை வீர அழகர் கோயில், தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள், வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருள்வார். இளையான்குடி பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.