sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

5 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் செருதப்பட்டி கிராம மக்கள் அவதி

/

5 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் செருதப்பட்டி கிராம மக்கள் அவதி

5 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் செருதப்பட்டி கிராம மக்கள் அவதி

5 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் செருதப்பட்டி கிராம மக்கள் அவதி


ADDED : நவ 07, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 5 மாதமாக போர்வெல் பம்ப் வேலை செய்யாததால் கிராமத்தினர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இவ்வொன்றியத்தில் வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி செருதப்பட்டியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் உப்பு சுவையுடன் குடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் அருகே காவனிக்கண்மாய் கரையில் தனியாக போர் போடப்பட்டு மோட்டார் மூலம் நேரடியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு முன்பு மோட்டார் பம்ப் பழுதடைந்ததால் இந்த போர்வெல்லில் தண்ணீர் வரவில்லை. கிராம மக்கள் உப்பு தண்ணீரை குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சிலர் பல மீட்டர் துாரமுள்ள தோப்புகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பெரும்பாலும் விவசாயக்கூலி வேலை செய்பவர்களே உள்ள நிலையில், ஊருக்குள் லாரியில் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.

கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விரைவில் போர்வெல்லை சரி செய்து குடிக்க தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us