sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை

/

இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை

இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை

இளையான்குடி அருகே 3 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை


ADDED : ஜூலை 18, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி முள்ளியாரேந்தல் அருகே உள்ள உடையார் குடியிருப்பு கிராமத்தில் 3 மாதமாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 250 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாக ஆங்காங்கே குழாய் அடிக்கடி உடைவதாலும், நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுது காரணமாக குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளியரேந்தல் அருகே உள்ள உடையார் குடியிருப்பில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதமாக இப்பகுதியில் காவிரி குடிநீர் வராததால் கிராம மக்கள் வண்டிகளில் வரும் நீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us