ADDED : டிச 26, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர், மற்றும் சதுர்வேதமங்கலம் கிராமங்களுக்கு உட்பட்ட மயானங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கத்திற்கு எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.
ஆற்றில் வெள்ளம் வரும்போது மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே இந்த இரு கிராமங்களிலும் மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.