sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது

/

டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது

டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது

டிரைவர் கொலையில் மேலும் இருவர் கைது


ADDED : மே 26, 2025 02:30 AM

Google News

ADDED : மே 26, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சீனமங்கலம் கார் உரிமையாளர் மற்றும் டிரைவர் வள்ளியப்பன் 43. இவர், அதே ஊரை சேர்ந்த கட்டட தொழிலாளி அர்ச்சுணன் 25, என்பவரின் காதல் விஷயத்தை கிராமத்தில் உள்ள அனைவரிடமும் கூறியுள்ளார்.

இந்த ஆத்திரத்தில் இருந்த அர்ச்சுணன், அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு வள்ளியப்பனை மறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் அர்ச்சுணனை திருவேகம்புத்துார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கட்டட தொழிலாளிகளான மச்சக்காளை மகன் ஆனந்த் 30, பெரியகருப்பன் மகன் பூமி 26, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us