/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : அக் 29, 2025 03:13 AM
சிவகங்கை: மதுரை கே.புதுார் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் என்ற குமார் 41. கட்டட தொழிலாளி. இவர் 2018 ல் காளையார்கோவில் பகுதியில் தங்கி கட்டட வேலை பார்த்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிவக்குமாருக்கு 10 ஆண்டுசிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தார்.

