ADDED : ஜூலை 22, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளை மாநாடு தலைவர் போஸ் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கீதா, பானுலதா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தங்க முனியாண்டி, மாவட்ட செயலாளர் அன்பரசன் பேசினர்.
ஜோசப் நடுநிலைப் பள்ளி தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார். கிளை செயலாளர் வக்கீல் ஞான சுபதர்ஷினி அறிக்கை வாசித்தார்.
நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.