ADDED : அக் 02, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
முதல்வர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் சுந்தரராமன், அழகப்பா பல்கலை இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கணேச மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் பரீதா பேகம் ஆகியோர் பங்கேற்றனர்.
பேராசிரியர் பெரியநாயகி ஏற்பாட்டை செய்திருந்தார்.