/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்
/
சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்
ADDED : ஏப் 02, 2024 02:04 AM
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராணி நேற்று இரண்டாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை குத்துக்கல்வலசையிலில் தொடங்கிய அவர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஓட்டுகள் சேகரித்தார்.
மாலையில் டவுன் பகுதியில் ஓட்டு கேட்டு சென்ற அவரின் வாகனம் நடுபல்க் என்னும் இடத்தில் உள்ள சிக்னல் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் நிற்காமல் சென்றது. இதனால் மறுபுறத்தில் சிக்னல் கிடைத்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் எந்த புறமும் செல்ல முடியாமல் தவித்தன.
சிக்னலில் நின்றவர்கள் பிரசாரத்தின் போதே இவ்வளவு செய்கிறார்கள் இனி வெற்றி பெற்று எம்.பி.,யானல் என்ன செய்வார்களோ என புலம்பினர். அப்பகுதியில் நின்றிருந்த போக்குவரத்து போலீசாரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.

