/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசியில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் மறியல்
/
தென்காசியில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் மறியல்
தென்காசியில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் மறியல்
தென்காசியில் குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் மறியல்
ADDED : ஏப் 30, 2024 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானுார் பார்டர் பகுதியில், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. ஏற்கனவே மக்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம், தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை அருகே கீழப்புதுார் பேரூராட்சி பகுதியிலும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தென்காசி -- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், பெண்கள் காலி குடங்களுடன் மறியல் நடத்தினர்.