sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்

/

மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்

மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்

மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்


ADDED : செப் 03, 2024 02:45 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட குவாரி களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில், கனிமவளம் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, விபத்துகளில் அடிக்கடி உயிர் பலி ஏற்படுகிறது. எனவே அதிக எடை கொண்ட லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை புளியரை போக்குவரத்து போலீசார் சோதனையிட்டனர். லாரி டிரைவர் வைத்திருந்த எடை சீட்டில், 36,730 கிலோ கனிம வளம் எடுத்துச் செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசார் அந்த லாரியை எடை நிலையத்திற்கு ஓட்டிச் சென்று சோதனையிட்டபோது, 44,610 கிலோ இருந்தது. 8,000 கிலோ குறைத்து சீட்டு பெற்றிருந்தனர். இதையடுத்து, புளியரை போலீசார், அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

தவறான எடை சீட்டு தந்த செங்கோட்டை பிரானுார் பார்டரில் உள்ள எடை நிலையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us