/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்
/
மோசடி எடைச்சீட்டுடன் வந்த கேரள லாரி பறிமுதல்
ADDED : செப் 03, 2024 02:45 AM
தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட குவாரி களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில், கனிமவளம் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, விபத்துகளில் அடிக்கடி உயிர் பலி ஏற்படுகிறது. எனவே அதிக எடை கொண்ட லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை புளியரை போக்குவரத்து போலீசார் சோதனையிட்டனர். லாரி டிரைவர் வைத்திருந்த எடை சீட்டில், 36,730 கிலோ கனிம வளம் எடுத்துச் செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
போலீசார் அந்த லாரியை எடை நிலையத்திற்கு ஓட்டிச் சென்று சோதனையிட்டபோது, 44,610 கிலோ இருந்தது. 8,000 கிலோ குறைத்து சீட்டு பெற்றிருந்தனர். இதையடுத்து, புளியரை போலீசார், அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
தவறான எடை சீட்டு தந்த செங்கோட்டை பிரானுார் பார்டரில் உள்ள எடை நிலையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.