sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

 மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது

/

 மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது

 மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது

 மின் இணைப்பிற்கு லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது


ADDED : நவ 25, 2025 11:47 PM

Google News

ADDED : நவ 25, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், கீழ வீராணத்தை சேர்ந்தவர் செல்வகணேஷ், 30; இவர், தன் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள இலவச மின் இணைப்பிற்கு, 24,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்.

மின் இணைப்புக்கு, 7,000 ரூபாய் தருமாறு, வி.கே.புதுார் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் கேட்டார். செல்வ கணேஷ், தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தலில், 7,000 ரூபாயை நேற்று, வி.கே.புதுார் மின்வாரிய அலுவலகத்தில் பிரேம் ஆனந்திடம் கொடுத்தபோது, அவர் தன் நண்பரான தெற்கு கழநீர்குளத்தை சேர்ந்த துரை என்பவரிடம், பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

பணத்தை துரை பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், துரை, பிரேம் ஆனந்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us