sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது

/

போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது

போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது

போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு : பெண் உட்பட 4 பேர் கைது


ADDED : நவ 10, 2025 11:58 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசியில் நடந்த இரண்டாம் நிலை போலீஸ் எழுத்து தேர்வில் அலைபேசி மூலம் தேர்வு எழுத முயற்சித்தவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. தென்காசி அருகே இலஞ்சி பள்ளியில் நடந்த எழுத்து தேர்வில், சிவகிரியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் 23, தேர்வு எழுதினார். அவர் தேர்வறைக்கு அலைபேசியை கொண்டு சென்று இருந்தார். கேள்வித்தாளை அவர் படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் சிவகிரியைச் சேர்ந்த நண்பர்கள் பாண்டியராஜன் 23, மல்லிகா 22, ஆகியோருக்கு அனுப்பினார். அவர்கள் உடனடியாக பதில்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினர். அதனை கவனித்த தேர்வு அறை கண்காணிப்பாளர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அவருக்கு பதில்கள் வழங்கிய பாண்டியராஜன், மல்லிகா மற்றும் தேர்வு பயிற்று மையம் நடத்தும் நாமக்கல் பயிற்சியாளர் பிரதீப் 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோபிகிருஷ்ணன் தேர்வு வளாகத்திற்குள் அலைபேசி கொண்டு செல்லும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடாக இருந்ததற்காக போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us