/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
போலீஸ் தேர்வில் முறைகேடு: பெண் உட்பட 4 பேர் கைது
/
போலீஸ் தேர்வில் முறைகேடு: பெண் உட்பட 4 பேர் கைது
ADDED : நவ 10, 2025 11:33 PM
தென்காசி: தென்காசியில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில், மொபைல் போன் மூலம் வாட்ஸாப்பில் பதில் பெற்று, தேர்வு எழுத முயற்சித்தவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தமிழகம் முழுதும் நடந்தது. தென்காசி அருகே இலஞ்சி பள்ளியில் நடந்த எழுத்து தேர்வில், சிவகிரியை சேர்ந்த கோபிகிருஷ்ணன், 23, தேர்வு எழுதினார்.
அவர் தேர்வறைக்கு மொபைல் போனை மறைத்துக்கொண்டு சென்றார். அதன் மூலம், கேள்வித்தாளை அவர் படம் பிடித்து, சிவகிரியை சேர்ந்த பாண்டியராஜன், 23, மல்லிகா, 22, ஆகியோருக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார். அவர்கள் உடனடியாக பதில்களை அனுப்பினர்.
இதை எழுதிய போது, கவனித்த தேர்வறை கண்காணிப்பாளர், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவருக்கு பதில்கள் வழங்கி உதவிய சிவகிரி பாண்டியராஜன், 23, மல்லிகா, 22, தேர்வு பயிற்றுனர் நாமக்கல்லை சேர்ந்த பிரதீப், 31, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கோபிகிருஷ்ணன் தேர்வறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்லும் அளவுக்கு, பாதுகாப்பு குறைபாட்டில் இருந்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

