/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ரூ.12 கோடி சிலையை மீட்க கோரிக்கை
/
ரூ.12 கோடி சிலையை மீட்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 11:54 PM

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளம் வாடா கலைநாயகி திருவெண்காடு கோவிலில் திருடு போன பழமையான, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க, போலீஸ் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் வலியுறுத்தினார்.
தென்காசி, குற்றாலம் சித்திரை சபை கோவிலில் நேற்று தரிசனம் செய்த பொன்மாணிக்கவேல் கூறியதாவது: வீணாதர தட்சிணாமூர்த்தி ஐம்பொன் விக்ரகம் 45 ஆண்டுகளுக்கு முன் திருடு போனது. ஏற்கனவே சிலை கடத்தலில், 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்மா ஷெரின் என்பவரிடம் அந்த சிலை உள்ளது.
அதன் மதிப்பு, 12 கோடி ரூபாய். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் சுஷ்மா ஷெரின், வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையை ஏலம் விட பட்டியலிட்டுள்ளார்.
அவரிடம் தமிழகத்துக்கு சொந்தமான, 280 கோடி ரூபாய் மதிப்பிலான 39 சிலைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்து அந்த ஏலத்தை நிறுத்தி, தொன்மையான சிலைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.