/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி அருகே மனைவி கண்முன் கணவன் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை: தலையை துண்டித்து 10 கி.மீ., எடுத்து சென்றனர்
/
தென்காசி அருகே மனைவி கண்முன் கணவன் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை: தலையை துண்டித்து 10 கி.மீ., எடுத்து சென்றனர்
தென்காசி அருகே மனைவி கண்முன் கணவன் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை: தலையை துண்டித்து 10 கி.மீ., எடுத்து சென்றனர்
தென்காசி அருகே மனைவி கண்முன் கணவன் பழிக்கு பழியாக வெட்டிக்கொலை: தலையை துண்டித்து 10 கி.மீ., எடுத்து சென்றனர்
ADDED : ஏப் 17, 2025 01:33 AM

தென்காசி:தென்காசி அருகே பழிக்கு பழியாக மனைவி முன் கணவன் வெட்டி கொலை செய்யப்பட்டார். தலையை 10 கி.மீ., எடுத்துச் சென்று கோயில் முன் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தை சேர்ந்த குமாரசாமி மகன் குத்தாலிங்கம் 35. இவர் கீழப்புலியூரில் திருமணம் செய்து, மனைவி, குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். அங்கு கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்தார்.
குத்தாலிங்கம் நேற்று மதியம் 3:00 மணிக்கு கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மனைவியுடன் சென்றார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு அரிவாள்களுடன் மறைந்திருந்த 4 பேர் கும்பல் குத்தாலிங்கத்தை துரத்தினர்.
அவர் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள இன்னொரு அறைக்குள் ஓடி தப்பிக்க முயற்சித்த போது சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அவரது தலையை துண்டித்து எடுத்தனர்.
இதை பார்த்துக் கண்டிருந்த குத்தாலிங்கம் மனைவி துடிதுடித்தபடி கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் குத்தாலிங்கம் தலையை வெட்டி துண்டித்து எடுத்துக் கொண்டு டூவீலர்களில் தப்பியது. தலையை 10 கி.மீ., கொண்டு சென்று குற்றாலம் காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பகுதியில் வைத்து விட்டு சென்றனர். தென்காசி போலீசார் சம்பவ இடத்தில் குத்தாலிங்கத்தின் உடலையும் காசி மேஜர்புரத்தில் தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பழிக்கு பழியாக...
போலீசார் விசாரணையில், 2024 நவ.,16ல் காசிமேஜர்புரத்தில் ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பட்டு ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது.
ஏற்கனவே நடந்த கொலை காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பகுதியில் நடந்ததால் அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கொலை கும்பல் சென்றுள்ளது.