sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ஆபத்தான ஆலமரங்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

ஆபத்தான ஆலமரங்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஆபத்தான ஆலமரங்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஆபத்தான ஆலமரங்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : மார் 16, 2025 07:15 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தமிழகம்-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள ஆலமரங்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வில் உறுதியானால் அகற்றப்படும் என என்.எச்.ஏ.ஐ.,தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

சிவகிரி பகுதியை சேர்ந்த கருணாலய பாண்டியன், தங்கராஜ் தாக்கல் செய்த மனு:

சிவகிரி அருகே சுப்பிரமணியபுரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் ஆலமரங்கள் உள்ளன. இவை தமிழகம்- -கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளன. இவை சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. மரங்களை அகற்றக்கோரி கலெக்டர், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) திட்ட இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

என்.எச்.ஏ.ஐ., தரப்பு: மரங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட வன அலுவலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்ட நடைமுறைகளை பின்பற்றி அம்மரங்கள் அகற்றப்படும்.

இவ்வாறு தெரிவித்தது.

இதை பதிவு செய்த நீதிபதி: ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us