sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?

/

தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?

தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?

தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?


ADDED : செப் 06, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குத்து விளக்குகள் உட்பட பல்வேறு பொருட்கள் மாயமானது குறித்து, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய வெள்ளி, பித்தளை, வெண்கல பொருட்களை சில தினங்களுக்கு முன், ஒரு டெம்போ வாகனத்தில், 10 பெட்டிகளில் சிலர் ஏற்றி செல்வது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய கோவில் செயல் அலுவலர் பொன்னி, தென்காசி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், என்னென்ன பொருட்கள் காணாமல் போனது, அவற்றின் மதிப்பு குறித்த முழுமையான விபரம் இல்லாததால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

அவற்றை யார் எடுத்துச் சென்றது என்ற விபரம் தெரியவில்லை. கோவில் அர்ச்சகர் செந்திலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us