sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்

/

பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்

பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்

பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்


ADDED : அக் 28, 2025 12:02 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: பஸ் படியில் நின்று பயணித்த கல்லுாரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் அருகே பட்டவெளியை சேர்ந்தவர் இளம்பரிதி, 18; கும்பகோணம் அருகே தனியார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர். நேற்று காலை கல்லுாரி செல்ல, சீர்காழியில் இருந்து கும்பகோணம் வந்த அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் அதிக கூட்டம் இருந்ததால், இளம்பரிதி மற்றும் சில மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணித்தனர்.

அப்போது, கல்லுாரி பஸ் ஸ்டாப்பில், இளம்பரிதி வந்த அரசு பஸ், முன்புறம் நின்ற அரசு பஸ்சை முந்தியபோது, அந்த பஸ்சின் மீது உரசியதில், இளம்பரிதி, திருப்பனந்தாளை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் முகம்மது ரபீஸ், 15, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இளம்பரிதி உயிரிழந்தார். முகம்மது ரபீஸ் சிகிச்சை பெறுகிறார். சோழபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us