ADDED : ஜூலை 12, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே ஆற்றுச்சுழலில் சிக்கிய திருநங்கை மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்சி, பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் துளசி, 29; திருநங்கை. இவரது நண்பர்களான திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரோஷினி பிரியா, 28, திருச்சோற்றுத்துறையை சேர்ந்த ரமேஷ், 31, ஆகியோர், நேற்று முன்தின மாலை, 6:30 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை குடமுருட்டி ஆற்று தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, துளசி, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, தண்ணீர் சுழலில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு வீரர்கள், துளசி உடலை மீட்டனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரிக்கின்றனர்.