sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

1500 பெண்கள் சுய தொழில் முனைவோராக வாய்ப்பு; ' சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தால் பயன்

/

1500 பெண்கள் சுய தொழில் முனைவோராக வாய்ப்பு; ' சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தால் பயன்

1500 பெண்கள் சுய தொழில் முனைவோராக வாய்ப்பு; ' சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தால் பயன்

1500 பெண்கள் சுய தொழில் முனைவோராக வாய்ப்பு; ' சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தால் பயன்


ADDED : ஆக 15, 2024 03:49 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் 'சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தில் ரூ.30கோடிக்கான கட்டமைப்பு வசதிகள் நிறைவடைய உள்ளது. இதனால் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1500 பெண்கள் சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரை தொழில் முனைவோராக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி 2015ல் 'சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டம் செயல்படுத்த தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் 2018-2019ல் தேனி மாவட்டமும் தேர்வானது. இதில் தேனி ஒன்றியத்தில் ரூ.30 கோடி மதிப்பில் தொழிற்சாலைகள், இயந்திரங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இத் திட்டம் மூலம் தேனி ஒன்றியத்தில் உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, காட்டுநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர், பெண்கள் தொழில் முனைவோராக மேம்படுத்த 31 வகையான தொழில்கள் துவங்க தொழிற்கூடங்கள் தயாராகி உள்ளது. இங்கு குடிநீர், இணைய வசதி, இ-சேவை மையம், திட, கழிவு மேலாண்மை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் பசுமை குடில், நிழற் கூடங்களில் வேளாண் பயிர்சாகுபடி, பட்டு வளர்ப்பு, குளிர்பதன கோடவுன்கள், வேளாண் விளைபொருட்களை பாதுகாக்க பயன்படும் கோடவுன்கள், பேக்கரி, சிறுதானியங்கள், காய்கறிகளை மதிப்பு கூட்டு பொருட்கள், ஜூஸ் தயாரித்தல், வாழைநாரில் கைவினை பொருட்கள் தயாரித்தல், நாட்டுக்கோழி பண்ணை, நெல் அரவை ஆலை, மண்புழு உரம் தயாரித்தல், தேன் பிரித்து எடுத்தல், சோலார் உலர்த்தி, செயற்கை நகைகள் தயாரித்தல் போன்ற தொழிற்கூட அலகுகள் அமைய உள்ளது.

இத் திட்டத்திற்காக மகளிர் திட்டம், வேளாண் துறை உள்ளிட்ட பிற அரசு துறைகள் சார்பில் 1500 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். 7 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் குழுவினருக்கு தொழில் துவங்க வங்கி கடன் வசதி மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதனால் பெண்கள் சுயதொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது. தொழில் துவங்கினால் குடும்ப பொருளாதாரம் மேம்படும். இத்திட்டம் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us