ADDED : ஜூன் 09, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டிபட்டி ரயில்வே பீடர் ரோட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில் 'இப் பகுதியில் வடிகால் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் பரிந்துரையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தில் வடிகால் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது'. என்றனர்.