ADDED : செப் 04, 2024 01:16 AM
மூணாறு : மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை போன்று 13 சதவீதம் போனஸ் வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் நிரந்தர தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் லாப விகிதத்தின் அடிப்படையில் நிர்வாகம் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி 2023 -20-24 நிதியாண்டின் போனஸ் குறித்து பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. தொழிற்சங்க பிரதிநிதிகள் மணி, முனியாண்டி (ஐ.என்.டி.யு.சி), அவுசேப், பழனிவேல்(ஏ.ஐ.டி.யு.சி), சசி, சாஜி (சி.ஐ.டி.யு) ஆகியோர் தோட்ட நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் தொழிலாளர்களுக்கு 13 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. செப். 7ல் போனஸ் வழங்க நிர்வாகம் முன் வந்தது. கடந்தாண்டு 13 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.