ADDED : ஜூலை 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : போடி டவுன் எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் குலாலர்பாளையம் சேதுபாஸ்கரன் தெருவில் ரோந்து சென்றனர். அதே தெருவை சேர்ந்த பாண்டி 70, சட்டவிரோத விற்பனைக்காக 8 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 2013ல் இருந்து இதுவரை 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று 37வது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.