sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண்ணில் நைட்ரஜன் அதிகரிப்பால் விளைச்சல் குறையும் அபாயம் வேளாண் அதிகாரி எச்சரிக்கை

/

மண்ணில் நைட்ரஜன் அதிகரிப்பால் விளைச்சல் குறையும் அபாயம் வேளாண் அதிகாரி எச்சரிக்கை

மண்ணில் நைட்ரஜன் அதிகரிப்பால் விளைச்சல் குறையும் அபாயம் வேளாண் அதிகாரி எச்சரிக்கை

மண்ணில் நைட்ரஜன் அதிகரிப்பால் விளைச்சல் குறையும் அபாயம் வேளாண் அதிகாரி எச்சரிக்கை


ADDED : ஜூலை 25, 2024 05:05 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: வேளாண் சாகுபடியில் அதிக உரமிடுவதால் தழைச்சத்துக்கள் ( நைட்ரஜன் ) அதிகரித்து மண்ணின் வளம் கெட்டு, விளையும் தன்மை குறையும் என வேளாண் அதிகாரி எச்சரித்துள்ளனர்.

யூரியா பயன்படுத்துவதால் மண்ணில் தழைச்சத்துங்கள் ( நைட்ரஜன் ) தங்கி மண்ணின் வளத்தை பாதித்து வருவதாக வேளாண் துறை எச்சரித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த 'பயர்பிளை லைப் சயின்ஸ்சஸ்' என்ற வேளாண் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கட்டுரையை சுட்டிக்காட்டி வேளாண் அதிகாரி கூறியதாவது :

நெல் பயிருக்கு தழைச்சத்து ( நைட்ரஜன் ) 12 முதல் 14 சதவீதம் தான் தேவை. ஆனால் நாம் இடும் யூரியாவில் 46 சதவீதம் உள்ளது. நெல் பயிர் எடுத்த 14 சதவீதம் போக மீதமுள்ள நைட்ரஜன் மண்ணில் தங்கி விடும். வளி மண்டலத்தில் நைட்ரஜன் இயற்கையாக உள்ளது.

நுண்ணூட்டம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தினால், அது வளி மண்டலத்திலிருந்து நைட்ரஜனை கிரகித்து கொள்ளும். ஆனால் விவசாயிகள் அதை கேட்காமல் யூரியாவை ஈடுகின்றனர்.

அதில் அதிகமாக உள்ள நைட்ரஜன் மண்ணில் தங்கி, மண் வளத்தை பாதித்து விளைச்சல் குறைகிறது. மண்ணில் காணப்படும் நைட்ரஜஸ் ஆக்சைடு, பசுமை குடிலில் இருந்து வெளியேறும் வாயு மூலம் உருவாகிறது. இது 300 சதவீதம் கார்பன் டை ஆக்சைடை விட அதிக வெப்பத்தை உருவாக்கும்.

இந்தியாவில் மண்ணில் அதிகமாக உள்ள நைட்ரஜனுக்கு அதிகமாக யூரியா ஈடுவதே காரணமாகும். மண்ணின் வளத்தை மட்டுமல்லாமல், தண்ணீரையும் பாதிக்கும்.

எனவே உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்படுத்தும் போது மண் பரிசோதனை அவசியம். குறிப்பாக என்ன பயிர் சாகுபடி செய்யப் போகிறோம், அதற்கு எந்த அளவு உரம் மற்றும் பூச்சி மருந்து தேவை

என்பதை வேளாண் அதிகாரிகளிடம் கேட்டு பயன்படுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us