sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை

/

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படை சோதனை


ADDED : ஏப் 07, 2024 05:41 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளத்தில் அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கி இருந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணியாற்றுவதற்காக தஞ்சாவூர், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநிலநிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தேனி தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆனந்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனி அறைகளில் தங்கி உள்ளனர்.

இவருடன் சில நிர்வாகிகளும் உள்ளனர். இந்நிலையில் நிர்வாகிகள் அறைகளில் பணம் வைத்திருப்பதாக வருமான வரித்துறைகளுக்கு ரகசிய தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:30 மணி முதல் 12:30 வரை பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன், வருமானவரித்துறையினர் நான்கு பேர், பறக்கும் படையினர் அறைகளில் சோதனையிட்டனர். பைகள், சூட்கேசுகள்,

பீரோக்கள், கட்டில், மெத்தையில் சோதனையிட்டனர். இதில் எந்த ஆவணமும், பணமும் கிடைக்கவில்லை. ஆர்.டி.ஓ.,

முத்து மாதவன் கூறுகையில்: வருமான வரித்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. லோக்சபா தேர்தல்நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் இந்த சோதனையின் போது உடன் இருந்தனர் என்றார்.






      Dinamalar
      Follow us